Thursday, September 13, 2012

அண்ணாமலையார் அற்புதங்கள்

பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கையரைத்
தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைச் சொல்லிச்
சேய்போல் இருப்பர் கண்டீர், உண்மை ஞானம் தெளிந்தவரே…
நேற்று இரவு மன அமைதிக்காக வேண்டி, அண்ணாமலையார் அற்புதங்கள் இசைத்தட்டை கேட்டவாறு நித்திரையில் ஆழ்ந்தேன்... அப்பொழுது இந்த பாடலைக் கேட்க நேர்ந்தது... ஆஹா, ஆஹா, என்ன ஒரு செய்தி...
உண்மைதான், பெரிய பெரிய ஞானியரெல்லாம் பல சமயம் நம் கண்களுக்கு ஏதோ பித்து பிடித்தவர் போலவே நம் கண்ணுக்குத் தெரிகின்றனர்... ஆனால் உண்மையில் நாம் தான் பல வித பித்துகளைப் பிடித்துக் கொண்டு அலைகிறோம்... இப்பாடலைக் கேட்டதிலிருந்து எனக்கும் எப்பொழுது இந்த மாதிரி உண்மை ஞானம் தெளிந்து, பேய் போல் திரிந்து பிணம் போல் கிடப்போம் எனும் எண்ணம் ஆட்கொண்டு விட்டது...
நமசிவாயா நின்தாள் பணிந்தேன்;நின் பார்வை
எமைக்கண்டு நான்;அழிக்கும் நாளதுவும் எந்நாளோ
அந்நாளைக் கண்டிடவே எப்போழ்தும் என்நாவில்
உன்நாமம் வீற்றிருக்கத் தா..

No comments:

Post a Comment