Saturday, March 6, 2010

கிறுக்கல் - 25

படிக்க புத்தகங்கள் ஏராளம்
செய்திட செயல்களும் ஏராளம்
அடைய இலட்சியங்களும் ஏராளம்
எதையும் செய்திடாமல் அலுப்புடன்நான்...

உறங்கும் உடலில் விழித்திருக்கும் மனமாய்
உறங்கும் பகலின் ஒளிர்விடும் நிலவு...

கிறுக்கல் - 24

இல்லாத பொருள்களிலே
இன்பமுந்தான் இருக்குதுன்னு
இறைசுகத்தை மற்ந்திட்டே
இடம்பொருளைத் தேடுகிறாய்

இடமென்ன பொருளென்ன
இன்னபிற சுகமென்ன
இந்திரியம் அடக்கிடுவாய்
இறைசுகத்தைக் கண்டிடவே...

Friday, March 5, 2010

கிறுக்கல் - 23

சாமி யார்என உணர்த்தும்

சாமியார் நான் என்றவனை

சாமியே நீயென உரைத்து

சரணான சமூகம் இன்று

சாமியல்ல நம்போல் வெறும்

ஆசாமி என்றதும் அவனை

சன்மானம் தந்த கைகளால்

செருப்பையும் நெருப்பையும் தருது…

தலைமையைச் சென்று பார்க்கும்

தலைவராய் அனுப்பு என்றவனை

தலைமையே நீயாகு என்றே

தலைமையாக்கிய சமூகம் என்று

தலைவன் அல்ல அவன்-நம்

தலையை அடம் வைக்கும்

தறுதலை என்று உணர்ந்து-அவன்

தலையைக் கொய்வதும் என்று…?

Tuesday, March 2, 2010

கிறுக்கல் - 22

அனுபவப் பாடம் பெற

ஆரம்பமாய் தேடும் படலம்

இனியேனும் வேலை செய்து

ஈன்றோரை முகம் மலர்த்த

உள்ளத்தில் உறுதி பூண்டு

ஊர் ஊராய்த் தேடி நின்றேன்

எனக்கான ஒரு வேலை

ஏக்கந்தீர கிடைத்த போதும்

ஐயங்கள் மேலிட மெல்ல

ஒவ்வொன்றாய் களைந்து நானும்

ஓடியே உழைத்து நின்றேன்

ஔசித்திய உயர்வே குறியாய்…

கிறுக்கல் - 21

சாரலாய் வந்த மழை
தூறலாய் மாறி நின்றும்
சொட்டு சொட்டாய்
வீட்டின் கூரையில்
விட்டு விட்டு
ஒழுகும் மழையில்
கை நீட்டி ஆட்டம் போட
மனமிருந்தும் செயலில்லை
ஏழையாய் பிறந்ததாலே
ஏக்கம்நிறை பெருமூச்சோடு
எதிர்வீட்டு பஜ்ஜி வாசம்
பசியாற நுகர்வதால்....