சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Saturday, March 6, 2010
கிறுக்கல் - 25
கிறுக்கல் - 24
Friday, March 5, 2010
கிறுக்கல் - 23
சாமி யார்என உணர்த்தும்
சாமியார் நான் என்றவனை
சாமியே நீயென உரைத்து
சரணான சமூகம் இன்று
சாமியல்ல நம்போல் வெறும்
ஆசாமி என்றதும் அவனை
சன்மானம் தந்த கைகளால்
செருப்பையும் நெருப்பையும் தருது…
தலைமையைச் சென்று பார்க்கும்
தலைவராய் அனுப்பு என்றவனை
தலைமையே நீயாகு என்றே
தலைமையாக்கிய சமூகம் என்று
தலைவன் அல்ல அவன்-நம்
தலையை அடம் வைக்கும்
தறுதலை என்று உணர்ந்து-அவன்
Tuesday, March 2, 2010
கிறுக்கல் - 22
அனுபவப் பாடம் பெற
ஆரம்பமாய் தேடும் படலம்
இனியேனும் வேலை செய்து
ஈன்றோரை முகம் மலர்த்த
உள்ளத்தில் உறுதி பூண்டு
ஊர் ஊராய்த் தேடி நின்றேன்
எனக்கான ஒரு வேலை
ஏக்கந்தீர கிடைத்த போதும்
ஐயங்கள் மேலிட மெல்ல
ஒவ்வொன்றாய் களைந்து நானும்
ஓடியே உழைத்து நின்றேன்
ஔசித்திய உயர்வே குறியாய்…