Monday, January 25, 2010

பெயரில்லாதது

பரந்து நிற்கும்
பரவைத் தாயே – நின்
பாதம் தொட்டே
படகெடுத்தோமே

பசியால் தவிக்கும்
பிள்ளைகள் எமக்கு
பலவகை மீனை
பரிசளித்தாயே

பலநாள் இரவு
பிரிவால் வாடும் – எம்
பத்தினி வாழ்வில்
புயலளிக்காதே

பரிவோடு உயிரை
பிச்சை அளித்தால் –எம்
பிள்ளையை உன்புகழ்
பாடவைப்போமே…

1 comment:

சிட்டுக்குருவி said...

தலைப்பு - வாருங்கள் வாழவைப்போம்’னு வைங்க

Post a Comment