ஆற்றங்கரையில் நண்பர்களுடன் அளவலாவும் நேரம்
பெருக்கெடுத்து வரும் ஆழிப்பிரளயமாய் வெள்ளம்வர
பயத்தில் தான்கொண்ட பொருளை விடுத்து
பின்னங்கால் பிடரியில்பட உயிருக்காய் அனைவரும்ஓட
தாவிநீரை அணைத்திட தவழுமோர் குழந்தையாய்
அலுவலகப் பணியில் அகப்பட்ட நாள்இன்று…
சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
ஆற்றங்கரையில் நண்பர்களுடன் அளவலாவும் நேரம்
பெருக்கெடுத்து வரும் ஆழிப்பிரளயமாய் வெள்ளம்வர
பயத்தில் தான்கொண்ட பொருளை விடுத்து
பின்னங்கால் பிடரியில்பட உயிருக்காய் அனைவரும்ஓட
தாவிநீரை அணைத்திட தவழுமோர் குழந்தையாய்
அலுவலகப் பணியில் அகப்பட்ட நாள்இன்று…
கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே
நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே
கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே
நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே
விழியோடு இமைபோலவே பிரியாமல் துணையோடு
பல்லாண்டு நீவாழ்கவே
கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே
நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே
குழந்தைபல பெற்று நல்குடும்பமாய் வாழும்
மணவாழ்வின் ஆரம்ப நன்னாளிது
இன்பதுன்பம் யாவும் பகிர்ந்துகொண்டு வாழும்
இல்லறத்தின் ஆரம்ப நன்னாளிது
சந்தேகம் மனதில் இல்லாமல் வாழ்ந்தால்
இல்வாழ்க்கை ஆனந்தமே
சந்தேகம் தோன்ற மனம்விட்டுப் பேச
பறந்தோடும் சந்தேகமே
இன்றுபோல் என்றும் இன்பமுடன் வாழ
இறையருளை நாளும் வேண்டுவேன் நானும்
பல்லாண்டு நீவாழ்கவே
கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே
நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே...

மனமே மனமே பேசவிடு
குமுறுலைக் கொட்டித் தீர்த்துவிட
பேசா வார்த்தைகள் சேர்ந்து என்னுள்
பேதைமை இன்னும் வளர்த்திடுது
ஒருநாள் எதிர்த்து பேசியதால்
ஒவ்வா நட்பாய் நானானேன்
ஒருமுறை செய்த தவறாலே
ஒவ்வொரு முறையும் தவறானேன்
பேசிட என்னை அனுமதித்தால்
பேதைமை மறைய வாய்ப்புமுண்டு
மனமே மனமே பேசவிடு
குமுறுலைக் கொட்டித் தீர்த்துவிட…