Wednesday, August 25, 2010

கிறுக்கல் - 47

ஆற்றங்கரையில் நண்பர்களுடன் அளவலாவும் நேரம்

பெருக்கெடுத்து வரும் ஆழிப்பிரளயமாய் வெள்ளம்வர

பயத்தில் தான்கொண்ட பொருளை விடுத்து

பின்னங்கால் பிடரியில்பட உயிருக்காய் அனைவரும்ஓட

தாவிநீரை அணைத்திட தவழுமோர் குழந்தையாய்

அலுவலகப் பணியில் அகப்பட்ட நாள்இன்று…

Saturday, August 21, 2010

திருமண வாழ்த்துப்பா

கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே

நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே

கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே

நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே

விழியோடு இமைபோலவே பிரியாமல் துணையோடு

பல்லாண்டு நீவாழ்கவே

கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே

நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே

குழந்தைபல பெற்று நல்குடும்பமாய் வாழும்

மணவாழ்வின் ஆரம்ப நன்னாளிது

இன்பதுன்பம் யாவும் பகிர்ந்துகொண்டு வாழும்

இல்லறத்தின் ஆரம்ப நன்னாளிது

சந்தேகம் மனதில் இல்லாமல் வாழ்ந்தால்

இல்வாழ்க்கை ஆனந்தமே

சந்தேகம் தோன்ற மனம்விட்டுப் பேச

பறந்தோடும் சந்தேகமே

இன்றுபோல் என்றும் இன்பமுடன் வாழ

இறையருளை நாளும் வேண்டுவேன் நானும்

பல்லாண்டு நீவாழ்கவே

கல்யாணம் காணும் நட்பென்னும் உறவே

நல்வாழ்த்துச் சொன்னேன் உளமாற நானே...


Thursday, August 19, 2010

கிறுக்கல் -46
















துடுப்பிழந்த படகைக் காக்கும் துடுப்பாய்
வழிதவறிய காட்டில் வழிகாட்டியாய்
வன்முறை வெறியர்களை வேட்டையாடும் காவலனாய்
பறவைகளோடு போட்டி போட்டு பறக்கும் மனிதப்பறவையாய்
பாம்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில்
பாம்பை பிணைத்து கயிறாக்கும் மாயாவியாய்
நடக்கும் நிகழ்வனைத்திலும் நாயகனாகவே - நனவில்
நடக்குமா எனத் தெரியாத நான் கண்ட கனவுகளில்....

Monday, August 16, 2010

கிறுக்கல் - 45

மனமே மனமே பேசவிடு

குமுறுலைக் கொட்டித் தீர்த்துவிட

பேசா வார்த்தைகள் சேர்ந்து என்னுள்

பேதைமை இன்னும் வளர்த்திடுது

ஒருநாள் எதிர்த்து பேசியதால்

ஒவ்வா நட்பாய் நானானேன்

ஒருமுறை செய்த தவறாலே

ஒவ்வொரு முறையும் தவறானேன்

பேசிட என்னை அனுமதித்தால்

பேதைமை மறைய வாய்ப்புமுண்டு

மனமே மனமே பேசவிடு

குமுறுலைக் கொட்டித் தீர்த்துவிட…

Monday, August 9, 2010

வரதட்சினை

பெண்ணின் நிறம் குறைவு
அரசாங்க உத்தியோகம்
வீட்டிற்கு ஒரே பையன்
மணமகன் வீட்டில் பேசப்பேச
அடுத்து காத்திருக்கும் பெண்களை எண்ணி
மணமகள் வீட்டில் தவிப்பு
எத்தனை பவுனில் நிற்குமோ
மூத்தவள் புக்கக விலை...


வரதட்சனை வாங்கேனென்ற
கொள்கையால் மனம் நொந்தேன்
எனை நொந்தே வெளி வந்தேன்...
மச்சி வீடிருக்கு
மாருதி காரிருக்கு,
அரசாங்க பணியிருக்கு
மவராசன் பொலிருக்கான்
இருந்தும் ஏன் கேட்கலையோ
வரதட்சனை இவனுந்தான்
தெரியாத இடத்தினிலே
குறையேதும் இருந்திடுமோ
தெரிஞ்சுகிட்டே பேசிடலாம்
மத்தகதை என்றேதான்
முனுமுனுத்த கிழவி பேச்சால்...