Tuesday, May 10, 2011

இன்னொருமுறை

எங்கோ… என்றோ…
விட்டுச் சென்றதைத்
தொடர்ந்து முடிக்க
இங்கே இன்று ஜனித்திருக்கிறேன்…

விட்ட பணி நினைவுடன்
கருவறையில் தவம்கிடந்தேன்…
தவம்கலைந்த நொடியில்
தவத்திற்கான காரணம் தொலைத்தேன்…

ஏதேதோ தேடல்
புறத்திலும் அகத்திலுமாய்…
தேடும் பொருள்
இன்னதென்றுணராமல் தேடுகின்றேன்…

தேடலின் காரணம்
உணர்ந்தபொழுதில்
தேடி நின்றது மரணத்தை
எனதுடல்…

தேடலை விட்டு வைத்து
மீண்டும் தவம்கிடக்கிறேன்…
தேடலை முடிக்க; கருவறையில்…
இன்னுமொருமுறை.!

No comments:

Post a Comment