இணையத்தில் நான்தான்
வாடிக்கை இன்று
தெரிந்தவர் ஒருவரின்
பலவீனம் காண
தெரிந்தவர் ஒருவரால்
வேடிக்கையாய் பிறப்பேன்…
அன்பான பேச்சால்
சுவையான சிரிப்பால்
வளர்ந்தே நாளும்
வசியமாய் மாறுவேன்…
தேனில் விழுந்த ஈயாய் அவரும்
என்னுள் விழுந்து வெளிவர வாட
இழந்த சுயத்தை என்னுள் தேட
இளிப்பேன் நானும் வஞ்சக னாக…
எனக்கென சொல்லும்
எனக்கென உணர்வும்
நானா கேட்டேன்
தானாய் கொடுத்தார்…
இன்பமாய் நானும் வாழ்ந்திட இன்று
துரத்திட நினைத்தால் விடுவனோ நானும்
என்னையும் அழிப்பேன் எந்தையும் அழிப்பேன்
என்னை அழித்திட நினைக்கையில் நானும்…
No comments:
Post a Comment