Monday, May 30, 2011

திகம்பரன் கதை - வெண்பா வடிவில்

தவஞ்செய் முனிகள் சிவனை மறக்க
அவருள் செருக்கு மரமாய் வளர
பிறந்த உடலொடு நின்றான் - பொருளை
இரந்து பெறவே எழில்மிகு ஈசன்;
சிவனின் அழகில் முனிபத் தினிகள்
மயங்கி அவன்பின் தொடர; சினந்த
முனிகள் அபிசார யாகம் நடத்தி;
புலியை அனுப்ப அதனை அழித்து
உடையாய் அணிந்தான் உடுக்கை விரும்பி;
சினமது தணியா முனிகள் தொடர்ந்து
அனுப்பினர் மானையும் பாம்பையும் தாக்க;
அதனையும் ஈசன் அணிகலன் ஆக்க
அனுப்பினர் பூத கணங்களைத் தாக்க;
கணங்களை ஈசன் படையினில் சேர்க்க
சளைக்கா முனிகள் களிறினை ஏவ;
களிறை அழித்ததன் தோலை பரமனும்
போர்வையாய் ஆக்கி குறுநகை வீச;
அகத்தில் முனிகள் சிவனை நினைத்து
தொழுதிட அவரின் செருக்கை அழித்து
திகம்பரன் ஆனான் அறி.

No comments:

Post a Comment