ஒவ்வொரு முறையும்
தோற்று நிற்கிறேன் நான்.!
முடிவெடுத்தேன்
எப்படியும் இன்று ஜெயித்து விடுவதாய்...
உன் வரவை எதிர்பார்த்து.!
உன்னைக் கண்டதும்
பேசாமலே வெற்றி பெற்றதாய் உணர்வு...
மெதுவாய் கேட்டேன்
என்னுள் நீ எப்படி இருக்கிறாய் தெரியுமா?
கள்ளச் சிரிப்புடன்
சொல்லேன் கேட்கலாம்! என்றாய்...
நுரையீரலில் சுவாசகாற்றாய்
இதயத்தின் துடிப்புகளாய்
மூளையின் சிந்தனை ஓட்டமாய்
என்னுடல் முழுதும் வியாபித்திருக்கிறாய் என்றேன்...
பொய்யாக முகம் வாடி
எனக்கு நீ அவ்வாறு இல்லை என்றாய்...
பின் எப்படி என்றேன் நான்?
என்னுள்ளே மட்டுமல்ல
என் வெளியேயும்
பார்க்குமிடமெங்கும் நீயே வியாப்பித்திருக்கிறாய் என்றாய்...
வெற்றிச் சிரிப்போடு.!
இன்றும் எனை வென்று விட்டாயா
இறுக்கத்துடன் கேட்டேன்...
உன்னைப் போல பேச கற்றுத் தாயேன்?
இறுக்கி அனைத்து சொன்னாய்
நீ நீயாக இருப்பதாலேயே எனக்குப் பிடித்திருப்பதாய்.!
இறுக்கி அனைத்தபடி நானும் சொன்னேன்இறுக்கத்துடன் கேட்டேன்...
உன்னைப் போல பேச கற்றுத் தாயேன்?
இறுக்கி அனைத்து சொன்னாய்
நீ நீயாக இருப்பதாலேயே எனக்குப் பிடித்திருப்பதாய்.!
என்றும் தோற்கவே விரும்புவதாய்...
வியப்போடு கேட்டாய்...
என்ன! என்றும் தோற்க வேண்டுமா?
ம்ம்ம்... உன் இந்த அணைப்பிற்காய்
என்றுமே தோற்கலாம்...
ச்சீய் போடா
சினுங்கினாய் சில்லறையாய்...
கையேந்தி நின்றேன்...
என்ன? என்றாய்...
சேகரித்தேன் உன் சினுங்கல்களை
மருதானிக்கு மருதானி வைக்கவென்றேன்...
என்னைப் பேசியே கொல்லாதேடா என்றாய்
காதைப் பொத்தியவாறு...
என்கையையும் கொடுத்தேன் காதைப் பொத்த...
கைபட்ட கணத்தில் சிலிர்த்து நின்றாய்
காதலைக் கண்ணோடு கொடுத்து நின்றாய்
மூச்சினை வேகமாய் இழுத்து விட்டாய் - உன்னுள்
மூழ்கவும் வைத்தெனை தவிக்க வைத்தாய்
இமைகள் துடிக்காமல் உனை பார்த்து
இதழைக் கொடுக்கவா என கேட்க
இதய படபடப்பிலுன் உடல் நடுங்க
இதுவே போதுமென நான் விலக
இழுத்தாயுன் பிடியுள் இமைப்பொழுதில்
இதயத்தின் படபடப்பும் உடலின் சிலுசிலுப்பும்
அடங்கி இருந்தது உன்னுள்
தொடங்கி இருந்தது என்னுள்...
சிலிர்த்து நின்ற என்னைக் கண்டு
சிரித்து நின்றாய்...
மீண்டும் தோற்றாயா என்னிடமென்று.!
சொல்லத்தான் நினைக்கிறேன்
இப்பொழுதும் நான்...
என்றும் தோற்கவே வேண்டுமென்று.!
No comments:
Post a Comment