Monday, May 30, 2011

வெண்பாக்கள் சில

சொல்லில் வன்மையையும் சிந்தைத் தெளிவினையும்
அள்ளித் தருவாளே அட்சயப் பாத்திரமாய்
கல்விக்கு அதிபதியாம் எங்கள் கலைமகளை
உள்ளில் நினைத்து விட.


இன்பம் எதுவென்று தேடியே வாழ்க்கையின்
இன்பப் பொழுதுகளை வீன்செய்து வாழத்
திரும்புமோ இன்பப் பொழுதும் அதனால்
இருத்தலில் இன்பம் அடை.


எண்ணும் எழுத்தும் என்னுள் விதைத்து-நல்
எண்ணம் வளர்த்திவ் வுலகோர் வியந்திட
என்னையும் ஆக்கிய என்குரு அன்பினை
எண்ணிடும் நன்னாள்;இன் று.


பரியும் கரியும் உறுமும் களத்தில்
பயந்து நடுங்கி பதுங்கி நுழைந்து
இறந்த உடலின் சிரத்தைப் பறித்தே
இறைபவன் வீரனோ சொல்.

No comments:

Post a Comment