Monday, May 30, 2011

மழை

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
வானம் தான் பொத்தல் ஆனதோ - இல்லை
மேகம் தான் பொங்கி வந்ததோ...

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
இடிச்சத்தம் காதைப் பிளக்குதே - தாய்
மடிதேட என்னைத் தூண்டுதே...


என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
மின்னல் வந்து வின்னை வெட்டுதே - இதை
கண்ணில் பார்க்க வழியுமில்லையே...

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
மண் வாசம் தேடி வந்ததே - என்னை
பெண்வாசம் தேட வைக்குதே...

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
அனல் காற்றும் தென்றல் ஆனதே - எந்தன்
மனம் இன்று ஊஞ்சல் ஆடுதே...

என்ன மழை... என்ன மழை அடடா...
என்ன மழை... என்ன மழை அடடா...
வானம் தான் பொத்தல் ஆனதோ - இல்லை
மேகம் தான் பொங்கி வந்ததோ...

No comments:

Post a Comment