Tuesday, May 10, 2011

தொடர் பயணம்

பயணித்துக் கொண்டிருக்கிறேன்...
யாருமற்ற தனிமையில்
கால்களின் ஓட்டத்தில்
எங்கு செல்கிறேன் என புரியாமல்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்...


என்னோடு சேர்ந்து
எனக்குத் தெரியாமலே
என்னைத் தொடர்ந்து வருகிறாள்...

ஓரப்பார்வையின் உறுத்தலில்
நான் திரும்ப
முகம் மறைக்க எத்தனிக்கிறாள்
மேகத்தைக் கொண்டு...

என்னையும் பார்க்குமிவள் யாரோ????

ஆடை விலகாதோ - முழு
தரிசனம் கிடைக்காதோ...
திரும்பி பார்த்து திரும்பி பார்த்து
பயணிக்கிறேன்...

சட்டென்ற ஒரு பொழுதில்
வெட்கம் விட்டு முழுமுகம் காட்டினாள்...
பட்டென நின்றதென் கால்கள்...

கண்ணோடு கண் நோக்கியவள்
முழுதுமாய் மறைத்தாள்
கனப்பொழுதில் தன்னை...

கண்வழியே நுழைந்தவள்
கனவாகி மறைந்தனள்...
முன்னோக்கி நகர மறுத்தன கால்கள்
மண்ணோக்கி பார்க்க மறுத்தன கண்கள்...

முடிவானது...
யாருமற்ற தனிமையில்
கால்களின் ஓட்டத்தில்
கண்களின் துணைதேடிய பயணம்
நாளையும்.!!!

No comments:

Post a Comment