Monday, May 30, 2011

உடல்தானம்

சில நொடிகள் முன்வரை
இருந்தவர்
இப்போது இல்லை...
எங்கே போனார்???
தெரியவில்லை...
எப்படி போனார்???
தெரியவில்லை...

எனது தேவைக்காய்
என்னை வருத்தி
எனது எஜமானனாய் வாழ்ந்திருந்தவர்...
வேலையாளை மாற்றி விட்டாரோ!!!

எரிக்கவா புதைக்கவா???
சூடாய் விவாதிக்கிறார்கள்
இரண்டும் வேண்டாம் தானமாகக் கொடு...
எஜமானன் இல்லை.!
எனைச் சொல்ல வைக்க...

இதோ எரிக்கப் போகிறார்கள்
என்னோடு சேர்த்து
எனது ஆசையையும்...

ஒருவரிடமாவது சொல்லி இருந்திருக்கலாம்...
நான் ஆசைப்பட்டு எழுதி வைத்த
உடல்தான உயிலை...
எஜமானன் இருந்த போதே.!

No comments:

Post a Comment