Monday, August 1, 2011

நான்

புரியாத ஒன்றையும்
தெரியாத ஒன்றையும்
ஒத்துக்கொள்ளாத மனம்
இல்லாததாக்கி மகிழ்ந்து கொண்டிருக்கிறது...

ஏற்றமென்னும் சொர்க்கவாசலின்
தேடல் கதவுகளைப்
பூட்டி வைக்கிறது...

இறுகிய மனம்
இறுமாப்புடன் சமாதானம் சொல்கிறது...
இருப்பதைக் கொண்டு இன்பமுறுகிறேனென்று...

அடைபட்ட கதவினை உடைத்து விடாதிருக்க
நாணாமல் நிற்கிறது...
நான்.!

2 comments:

ராமலக்ஷ்மி said...

வெகு அருமை.

பிரசாத் வேணுகோபால் said...

ஊக்க வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அக்கா...

Post a Comment