எவரெல்லாம் பெரியரோ சொல்லிடு - இங்கு
எவரெல்லாம் சிறியரோ என்று...
கற்றாரெல்லாம் பெரியரா - மட்டு
கல்லாதோர்தான் சிறியரா...
பணம் கொண்டோர் எல்லாம் பெரியரா - அன்றி
பணமில்லாதார்தான் சிறியரா...
பலம் கொண்டோர் எல்லாம் பெரியரா - எதிர்க்க
பலமில்லாதார்தான் சிறியரா...
கற்றவன் பெரியவன் ஆகிட - அவனினும்
கற்றோர் முன்னவன் பெரியனா...
இங்ஙனம் எல்லாம் மாறிடும் - இவ்வுண்மை
எங்ஙனம் மறந்தனம்...
பார்வையில் தானிங்கு அனைத்துமே - உணர்ந்து
பார்த்திட பாரெலாம் சுபிட்சமே...
1 comment:
நன்றி அக்கா...
Post a Comment