Thursday, October 13, 2011

காதலிக்கலாம் வா - 10

பிடிக்காத கூட்டமொன்றில்
பிடித்தது ஒரு வாசம்...

பரிமளமாய், நறுமணமாய்
அவதரித்த புதுமலராய்
இருவிழியாள் கணைதொடுத்தாள்
அவளறியாது எனையிழுத்தாள்...

அகம் மறந்தேன்; புறம் மறந்தேன்
அகிலமதை உடன் மறந்தேன்...
மனம் தொலைத்தேன் பரிதவித்தேன்
மொழி அறியா நிலைவெறுத்தேன்...

பெண் அவளோ கன்னமிட்டாள்
என் நிலையை பின்னமிட்டாள்
அன்னமவள் மனமறிய
என் உறக்கம் அவள் பறித்தாள்...

என்ன இனி தெரியவில்லை
ஏங்கும் மனம் அடங்கவில்லை
சொன்ன மொழி கொஞ்சமிங்கே - மிச்சம்
சொல்ல இல்லை மொழியுமிங்கே...

No comments:

Post a Comment