Thursday, October 13, 2011

காதலிக்கலாம் வா - 9

இருக்கையில் இருந்தபடி
அமர்ந்தவாறு
அழகிய கச்சேரி ஒன்று இயலுமா???

அவள் செய்தாள்...

அலைபாயும் கூந்தல்
ஏழு ஸ்வரத்திற்கப்பால் ஓர் ஸ்வரம் அமைக்க
உருண்டு திரண்ட கருவிழிக் கோளங்கள்
எண்திசையும் இசை மீட்ட
கருவிழியின் கட்டளையேற்று
இமைகள் ஸ்ருதி சேர்க்க
நெற்றி கன்னம் மூக்கு இம்மூன்றும்
உணர்ச்சியால் கீதத்திற்கு உயிரூட்ட
புன்னகையில் மௌன ராகத்தையும்
அளவான சிரிப்பில் காதல் கீதத்தையும்
அழகாக இதழ் பாட
காற்றினில் கண்டேன் நான்!!!
கையால் ஒரு நடனம்...

ஆஹா...
எப்படி இவளால் மட்டும் முடிகிறது???
பரதமும் கதகளியும் குச்சிப்புடியும் கலந்து
மேல்நாட்டு நடனத்தை இடையில் புகுத்தி
காற்றுக்கும் வலிக்காமல்
கைகளும் சோர்வுறாமல்
நடனமாடி முடிக்க...

ஏய்!!! கடவுளே...
உனக்கு நான் என்ன குறை வைத்தேன்...
காணக் கிடையா இக்கச்சேரி காண
இன்னும் பல கண்கள் கொடாமல் போனது ஏன்???
எனக்கு மட்டும்...

No comments:

Post a Comment