விரல்களின் தழுவலில் வீனையின் மீட்டலாய்
கரங்களில் ஆங்கவள் கரண்டியை மீட்டினாள்...
மெல்லவள் இதழ்நாட மேலெழும் கிளர்ச்சியில்
அள்ளிய அன்னமோ துள்ளுது மகிழ்ச்சியில்...
இதழ்சேர் அன்னமோ இணைந்தது சொர்க்கமே
எஞ்சிய அன்னமோ விழுந்தது நரகமே
இதழ்பட்டு சிதறிய இன்னும்சில அன்னமோ
இடையினில் கண்டது திரிசங்கு சொர்க்கமே...
உடனடித் தேவைக்கு திரிசங்கு போதும்
உயிருடன் வாழவோ சொர்க்கமே வேண்டும்
என்னிதழ் வாடுது நரகினில் இங்கே
ஏங்குது வாழ்ந்திட சொர்க்கமெங்கு என்றே...
No comments:
Post a Comment