வண்ணத் தூரிகைகளை
வாரி இறைக்க
உயிரோட்ட ஓவியமானது
வெள்ளைக் காகிதங்கள்...
அடுக்கி வைத்த நீர் பாத்திரங்களில்
மஞ்சள் பூசி எழுகிறது
மூழ்கி எழும் பிரஷ்...
சட்டென ஒரு அதட்டலில்
ஓவியங்களும், குளித்த பிரஷ்ஷும்
குடிபுகுந்தன சிறைக்குள்...
வரையப்படாத ஓவியங்களும்
புதியதோர் குளியலுக்காய் பிரஷ்ஷும்
காத்திருக்கிறது விடுதலை வேண்டி...
அடுத்த பள்ளி விடுமுறைக்காய்.!
No comments:
Post a Comment