Thursday, October 13, 2011

குட்டி குட்டி கவிதைஸ்

நாற்றம்

கழிவுநீரின் துர்நாற்றம்
வாசனையாகிப் போகிறது - அவளின்
" ஐய, நாத்தம்... சீச்சீ... " என்ற வார்த்தையில்.!


கான்கிரீட் காடுகள்


வறண்ட பூமியின்
முதல் மழை...
மண்வாசனை இல்லை.!


அடுக்குமாடி குடியிருப்பு

பௌர்ணமி நிலவு
பார்க்க முடியவில்லை...
தரைத்தளத்தில் நான்.!


அறிவியல்

கணக்கர்கள் தேவையில்லை
கணிப்பொறியும், கால்குலேட்டரும் இருக்க...
கூட்டலுக்கும், கழித்தலுக்கும் கூட.!


கண்ணாடி பாலீஷ்

கொட்டும் மழையில்
சிக்னல் நிறுத்தத்தில்
கூவி விற்காமலேயே காலியாகிறது...
மொத்தமாய் எல்லா பத்திரிக்கைகளும்.!

பாசம்

பாசத்தோடு...
கூட ஒரு துளி உப்பும், உரப்பும்...
தேவாமிர்தமாகிறது...
மாலை நேர குளிருக்கு
காய்கறி வடிநீர்.!

காத்திருப்பு

மொட்டு...
மாலையிடத் தயார்...
மலராகி.!

No comments:

Post a Comment