Thursday, October 13, 2011

கண்ணாமூச்சி

பாதையைப் பார்த்து
பலகதைகள் பேசி
பயணமானபடி இரு மனங்கள்...

சாலையோர மறைவில்
சட்டென மறைந்துக்கொண்டு
சிரித்தபடி வேடிக்கைப் பார்க்கும் ஒன்று...

எதையோ இழந்ததாய்
எதேச்சையாய் திரும்பிப்பார்த்து - தொலைத்த
ஏமாற்றத்தில் ஒன்று

தொலைத்த உயிரை
தொலைத்த இடம்தேடி - பின்னோக்கித்
துழாவும் இருவிழிகள்...

தேடும் விழிகளை - இன்னும்
தேட வைக்க மறைவிடம்
தேடும் இரு விழிகள்...

தேடும் விழிகளின் விசும்பலில்
தேடக் கொடுத்தது கரைய
நாடிச் சேர்ந்தது மலர...

No comments:

Post a Comment