கண்டதும் வந்திடும் காதல்
நல்ல கதையடா எனநான் நகைத்தேன் - ஒரு
நங்கையைக் கண்டதும் நானே
நகைபொருள் ஆகினேன் தானே...
என்னுளே ஏனிந்த மாற்றம்
எப்படிச் சொல்லஎன் வாட்டம்
கண்களில் தேங்குது ஏக்கம்
எங்குதான் போச்சுதோ தூக்கம்...
பெண்ணவள் வந்திடக் கண்டு
பித்தனாய் ஆகினேன் இன்று
என்னவள் இவளென என்று
தன்னிலை மறந்தது நெஞ்சு
நித்தமும் அவளையேக் காணும்
பித்தமும் சிரசினை ஆளும்
இத்தனைக் கொடுமையா காதல் - ஐயகோ
சித்தமே உனக்குளேன் மோதல்
பெண்ணவள் சேர்ந்திடும் வழிகாண்
என்னதான் செய்யவோ இனிநான்
தெள்ளிய நண்பர்காள் வகையாய் - என்
சிந்தையில் ஏற்றுவீர் தெளிவாய்...
No comments:
Post a Comment