Tuesday, May 3, 2011

கருக்கலைப்பு

நான் என்ன தவறு செய்தேன்?

மரணித்துக் கொண்டிருக்கும்
என் இறுதி நேர
மரண சாசணம் இது...

நான் நீதி கேட்கவில்லை
காரணத்தைக் கேட்கிறேன்....
நான் என்ன தவறு செய்தேன்?

மூன்று திங்களுக்கு முன்பு
இலட்சம் கோடி எதிரிகளை வென்று
வெற்றிக்கனியை ருசித்தவன் நான்...

வெற்றிப்பெருமிதத்தில்
நாளுக்கு நாள்
சதை போட்டு விட்டேன்...

மூன்று நாட்களுக்கு முன்புதான்...
எனது இருப்பை உணர வைக்க
நான் வாழ்ந்த இடத்தில்
புரட்சி செய்தேன்...

புரட்சி... ஆம்.!
நான் வாழ்ந்த இடத்தின்
உரிமையாளருக்குக் குடலைப் புரட்டும்
புரட்சி.!

அன்றிலிருந்து
ஊட்டமில்லை - எனக்கு
வாழத் தெம்புமில்லை...

சக்தியற்று கிடந்த என்மேல்
இன்று
திராவக வீச்சு...

இத்திராவகத்தின் எரிச்சல்
தாங்க முடியவில்லை...
இதோ.! இறந்து கொண்டிருக்கிறேன்...

மீண்டும் கேட்கிறேன்...
காரணத்தைச் சிந்தியுங்கள்...
என் மரணத்திற்குப் பின்னாவது...
நான் என்ன தவறு செய்தேன்?

2 comments:

ஜாரியா said...

இதோ இறந்து கொண்டிருக்கிறேன்..
வாவ்.. வலியை சொல்ல முடியவில்லை..

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி அக்கா...

Post a Comment