Tuesday, September 15, 2009

காதலும் கல்லூரியும்

கானும் பொருளில் உன்னை கண்டு
கண்ணை மூடினால் கனவிலும் கண்டு
உணவைத் தொலைத்து உறக்கத்தையும் தொலைத்து
உறைவிடம் யாதென கனவில் கேட்டால்
உன்னுள்ளம் தானென சிரித்து சென்றாய்
காதல் இதுவென உணர்த்தி சென்றாய்
உணர்ந்த காதலை உரைத்திட எண்ணி
உருகி தவித்தேன் மணி(காலம்)தனை சபித்தேன்
உள்ளம் இளகி மணி(காலம்)யும் கரைந்தது
உன்னைக் கானும் நாளும் வந்தது
பொழுதும் புலர்ந்தது புதியதோர் யுகமாய்
பேருந்தும் தெரிந்தது புதியதோர் ரதமாய்
நாடியே வந்தேன் பரவச களிப்பால்
வாடியே போனேன் பாரா முகத்தால்
காண்போர் அணைவரையும் கடிந்து கொண்டேன்
காரணம் யாதென கலங்கி நின்றேன்
கால்மணி கழித்து திரும்பி பார்த்தாய்
காயமான நெஞ்சில் பால்தனை வார்த்தாய்
கடந்து போன விடுமுறை நாளில்
காணாமல் தவித்த கதைதனை சொன்னாய்
காதலரா என கண்டோர் கேட்ட போதும்
கண்களாலேயெ உணர்வை பரிமாறிய போதும்
காரணமின்றி உன்னிடம் கதைத்த போதும்
நட்பெனும் போர்வையில் திரிந்திட்ட நாமே
கல்லூரி தந்த விடுமுறை பிரிவில்
காதலை உணர்ந்த காதலர் ஆனோம்....

1 comment:

கோல்ட்மாரி said...

ம்ம்ம்ம்ம் ...நட்பில் இருந்து காதல் பிறந்த கதை

Post a Comment