Tuesday, September 15, 2009

ஓடிவா என்னோடு....

அமைதியை இழந்து

ஆடையை கிழித்து

இலக்கை தொலைத்து

ஈனமாய் போனேன்


உள்ளம் தொலைத்த

ஊடலால் இன்று

என்னை நானே

ஏசிக் கொண்டேன்


ஐயம் தொலைத்தென்

பிழையை பொறுத்திடு

ஒன்றாய் ஆவோம்

ஓடிவா என்னோடு....

1 comment:

கோல்ட்மாரி said...

உள்ளம் தொலைத்த

ஊடலால் இன்று

என்னை நானே

ஏசிக் கொண்டேன்


நல்லா எழுதி இருக்கீங்க !

Post a Comment