சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Friday, September 25, 2009
தயக்கம்
ஆயிரம் கதைகள் சொல்ல ஆர்ப்பரித்து வந்திட்ட அலைகள் அன்னமவள் கால்கள் வருடி அமைதியாக திரும்புதல் போல ஆசையைச் சொல்ல எண்ணி ஆர்வமாய் சென்ற நானும் அன்னமவள் கண்கள் வருடி அமைதியாய் திரும்பி ட்டேனே...
1 comment:
யார் அந்த அன்னமவள்? அண்ண மவளா? :D
Post a Comment