Tuesday, September 15, 2009

ஓரெழுத்து ஓர் மொழி

ஒர் எழுத்தே சொல்லாவது நமது தமிழ் மொழிக்குரிய பெருமைகளில் ஒன்று. இதனை ஓரெழுத்து ஓர்மொழி என்பர். தமிழில் மொத்தம் இவ்வாறு 42 ஓரெழுத்து ஓர் மொழி உள்ளது. இவற்றுள் சில் நாம் பழக்கத்தில் உபயோகப்படுத்துவது. மற்றும் சில இலக்கியங்களில் உள்ளது. இதோ உங்களுக்காக…
எழுத்து பொருள்
ஆ பசு
ஈ பூச்சி, கொடுத்தல்
ஊ இறைச்சி
ஏ அம்பு
ஐ ஐந்து, அழகு, தலைவன்
ஓ மதகு நீர் தாங்கும் பலகை
கா காத்தல்
சா இறத்தல்
தா கொடு
நா நான்
பா பாடல்
மா மாம்பழம், பெரியது
யா ஒரு வகை மரம்
வா அழை, கூப்பிடு
சீ இகழ்ச்சி குறிப்பு, ஒளி
மீ மேல்
தீ நெருப்பு
நீ நீவிர்
வீ மலர்
து உண்
கூ பூமி
மூ மூப்பு
தூ தூய்மை
பூ மலர்
சே எருது
தே கடவுள்
நே அன்பு
பே அச்சம்
மே மேல்
கை கைகள்
தை மாதங்களில் ஒன்று
நை வருத்தம், துன்பம்
பை கைப்பை
மை மசி
வை வைத்தல்
நொ வருத்து
கோ அரசன்
சோ மதில்
நோ துன்பம்
போ செல்
மோ மோத்தல்
வௌ திருடுதல்

1 comment:

கோல்ட்மாரி said...

மோ மோத்தல்
வௌ திருடுதல்
வீ மலர்

மக்கா இதுக்கு விளக்கம் கொடுங்க ப்ளீஸ் ?

Post a Comment