அன்பை வாரிதந்த அம்மாவை விட்டு
ஆதரவாய் தோள்தந்த அப்பாவை விட்டு
இன்னலில் உதவிய உற்றாரை விட்டு
ஈசன் கோவிலின் இசையை விட்டு
உள்ளம் தொலைத்த ஊரனி விட்டு
ஊர் திருவிழாவின் உவகையை விட்டு
எடுத்து வளர்த்த பூனையை விட்டு
ஏற்றம் இரைத்த நிலத்தை விட்டு
ஒட்டிப் பிறவா நண்பனை விட்டு
ஓடி ஆடிய மைதானத்தையும் விட்டென
பலதையும் தொலைத்து பரதேசம் வந்து
பரதேசி ஆனேன் பாழும் பணத்திற்காக....
1 comment:
வெளியூர் சென்று வாழும் நண்பர்களுக்காகவே எழுதின கவிதை , ரொம்ப நல்லா இருக்குது !
Post a Comment