சொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...
Friday, September 25, 2009
ஏக்கம்
பாதம்பட்ட மண் துகளின் பரிகசிப்பை தாளா அலைகள் பாதமேனும் தழுவிட எண்ணி பாடியே வருதல் போல் பார்வைப்பட்ட மாந்தர் எல்லாம் பரிகசித்துப் பேசும் முன்னர் பாதமேனும் தழுவிக் கொள்ளும் பாதுகையாக மாறிட லேனோ...
3 comments:
//பதாகையாக மாறிட லேனோ... //
யூ மீன் செருப்பு???
Aamaam
//பிரசாத் said...
Aamaam//
வை திஸ் கொலவெறி?
Post a Comment