காலை எழுந்ததில் இருந்து
பல் துலக்கியது
குளித்தது,
உடை அணிந்தது...
எல்லாவற்றையும் சொல்லி முடித்து
இனி உறங்க வேண்டும் என்கையில்...
ஹ்ம்ம்ம்...
செல்லச் சினுங்கலுடன் கொஞ்சி நின்றாள்...
எல்லாம் சரியாகத் தான் செய்கிறீர்கள்...
எனக்கான அழைப்பை மட்டும் மறந்து.!
சட்டென நினைவுக்கு வந்தது...
இந்த போன்காலைச் செய்தவள் அவள்.!
No comments:
Post a Comment