Tuesday, December 13, 2011

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும்

நந்தா அண்ணா, தனது திருமண அறிவிப்பைச் சொல்லும் போதே எந்த வித முக்கிய வேலையும் அன்றைய தினத்தில் இல்லையேல் கட்டாயம் நான் திருமணத்தில் கலந்து கொள்வேன் எனச் சொல்லி இருந்தேன்...

எனது சூழ்நிலையோ அண்ணனின் திருமணத்தன்று எந்த வேலையும் இல்லாமல் போனாலும், அதற்கு முன்னும் பின்னும் சில முக்கிய நிகழ்வுகளில் நான் இருக்க வேண்டிய கட்டாயம். செல்வதா வேண்டாமா என்று ஒரு வாரம் மனப்போராட்டத்தில் இருந்த நான் ஒருநாள், பல நாட்கள் இணையம் வராமலும், இணையம் வந்தாலும் இன்விசிபிளிலும் இருந்த நான் அன்று அவைலபிள் மோட் வந்தேன்...

அவைலபிள் வந்த ஐந்து நிமிடத்திற்குள்ளாக நந்தா அண்ணன் சாட் வின்டோவில், திருமணத்தைப் பற்றிய நினைவுறுத்தல் செய்து ஒரு குறுந்தகவல்...

படித்ததும், அண்ணா வேலைப்பளு இருக்கிறது. முடிந்தால் திருமணத்தன்று காலை கிளம்பி வரப் பார்க்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம் என்று மறுமொழி அனுப்பினேன்...

பரவாயில்லை, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. திருமணத்திற்கு வர முயற்சி செய் தம்பி என்றார்.

அவரது வருத்தம் தொய்ந்த அந்த மறுமொழி சொன்னது, என்னையும் அவர் எதிர்பார்த்து காத்திருக்கும் பாசம்.

முடிவெடுத்தேன்... பர பர வென்று எனது திட்டமிடலில் சிறு சிறு மாற்றம் செய்தேன், திருமணத்தன்று காலை எப்படியும் திருமணத்திற்கு கிளம்பி செல்வது என்று.

நாள்: 16.11.2011; நேரம்: காலை ஆறரை மணி

சமீப காலமாக அதிகாலை எட்டு மணிக்கு எழுந்தே பழக்கப்பட்ட நான் நள்ளிரவு ஆறரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பத் தயார்.

காவேரிப்பட்டிணத்திலிருந்து தருமபுரியும், தருமபுரியில் இருந்து மேட்டூரும் பேருந்து பயணம்.

தருமபுரியிலிருந்து மேட்டூர் செல்லும் வழியில் எனது பேருந்து தொலைகாட்சிப் பெட்டியில் அந்த அதிகாலை வேளையில் ஒரு அபரிமிதமான பாடல்...

இப்பாடல் பார்த்ததும் நந்தா அண்ணனை நினைத்து வயிறு வலிக்கச் சிரித்தேன், என்னை பைத்தியமோ என்று மற்றவர்கள் முறைத்து பார்க்கும்படி... என்ன பாட்டு என்று தானே யோசிக்கிறீர்கள்... சொல்கிறேன்... சிறிது இடைவேளை விடுத்து... பாடல் காட்சி, விஜயகாந்த் பட்டை சாராயம் குடித்துக் கொண்டு பாடுவதைப் போன்று... முயற்சி செய்யுங்கள்...

No comments:

Post a Comment