Tuesday, December 13, 2011

வெண்பாக்கள் சில...

எரியும் நெருப்பாய் தெரியும் சுடரில்
எரிந்தது மீளா மறுமுறை - அஃதாய்;
கடந்த பொழுதில் கிடந்தே தவிக்க
கடந்தது வாராது அறி.

உடலை வருத்தி உளத்தை அடக்கி
குடலைச் சுருக்கி கடுந்தவஞ் செய்தும்
பிரசன்னம் ஆகா இறையவன் பார்க்க
பிறரிடம் காட்டுநீ அன்பு.

விழியால் விடுத்த புதிரை விலக்க
பழியாய் கிடந்தேன் பதிலதைத் தேடி
தவியாய் தவித்து தணலாய் தகித்து
கவியாய் அலையும் மனது.

No comments:

Post a Comment