Tuesday, December 13, 2011

நந்தா அண்ணா திருமணமும்​, நண்பர் குழாம் சந்திப்பும் - 3

சினுங்கும் அலைபேசியை எடுத்துப் பார்த்தால், எதிர்முனையில் உதயன். அவன் எங்கிருக்கிறான் என விசாரிக்கும் போது லாட்ஜுக்கு கீழ் அவன் இருப்பதாகச் சொல்ல அவனைப் பார்க்க துரை ஐயாவிடமும், ச.கி.ந ஐயாவிடமும் விடைபெற்று கீழே சென்றேன்.

கீழே உதயனும், ஓம்ஸ்ரீயும்(வில்லன்) நின்றிருந்தார்கள். அநியாயத்திற்கு எக்ஸ் மற்றும் ஒய் ஆக்ஸிஸில் வளர்ந்திருக்கும் வில்லனைப் பார்க்க பாவமாக இருந்தது. சிறிது நேர பரஸ்பர நலன் விசாரிப்புக்குப் பின் எதையெதையோ பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேர இடைவெளியில் துரை ஐயாவும், ச.கி.ந ஐயாவும் எங்களுடன் கலந்து கொள்ள, சற்று நேரத்தில் விழியன் அண்ணாவும், விழியன் அண்ணா குடும்பத்தாரும் கீழே வர அனைவரும் திருமண மண்டபத்திற்குச் செல்லக் காத்திருந்த வண்டியில் ஏறி அமர்ந்தோம்.

பேருந்து ஏறப் போகும் முன்பு எனக்கு அறிமுகமில்லாத நபர் என்னை எதிர்கொண்டார். ஆனால், விழாவுக்கு வந்திருந்தவர்களின் பட்டியலை உதயன் என்னிடம் சொல்லி இருந்ததால் எதிர் வந்த நபர் இன்னாராகத் தான் இருக்க வேண்டும் என்று உத்தேசித்து, தைரியமாக ஹாய் வினோத், திஸ் இஸ் பிரசாத்... பிரசாத் வேணுகோபால் என்றேன்... அவரும் ஹாய் என்று சொல்லி அறிமுகமாகிக் கொண்டார். அந்த புதுமுகம் வினோத் என்கிற ஸ்நாபக் வினோத்...

திடீரென ஹாய் ஹாய் என ஒரு அலம்பல். யாரடா என்று பார்த்தால் நம்ம டேமேஜர் மேடம்(அஷிதா அக்கா). எல்லோருக்கும் ஹாய் சொன்னவர்கள், துரை ஐயா பக்கத்தில் துரும்பாய் அமர்ந்திருந்த என்னைக் கண்டு கொள்ளாதது வருத்தமாய் போக நானே அவர்களை அழைத்து ஒரு ஹாய் சொன்னேன். அடுத்தது சுதாகர் (டேமேஜர் மேடத்திற்க வாழ்வளித்த வள்ளல்) ஐயாவுடன் அறிமுகம் ஆக எல்லோரும் வந்து விட்டதாக வண்டி புறப்பட்டது.

சிறிது நேரம் கழித்து ஓவியாவைப் பார்க்கலாமே என்று எண்ணிய போது தான் ஸ்டாலின் அண்ணா நினைவு வர, ஸ்டாலின் அண்ணாவை ஆளைக் காணோமே என்று துரை ஐயாவைக் கேட்க அவர்கள் அடுத்த வண்டியில் வருவதாகச் சொன்னார்.

எனக்கு பின் சீட்டில் குழலி. எத்தனை கெஞ்சியும் ஒட்டவே இல்லை. மிக ஆர்வமாக எதையே படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்கள். குழலி மொழியைக் கேட்டதும் எனக்கு ஐயன் எழுதிய குறளை


குழலினிது யாழினிது என்பஎன் செல்ல
குழலிமொழி கேளா தவர்

என்று மாற்றத் தோன்றியது. அத்துனை இனிமையாக பேசிக் கொண்டு வந்தாள் குழலி. குழலியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. திருமண மண்டபம் வந்து சேர்ந்தோம்...

வண்டியிலிருந்து இறங்கியதும், முகமலர வரவேற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். அவர்....

No comments:

Post a Comment