Tuesday, December 13, 2011

எது அழகு

அழகு இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே உள்ளத்தில் ஏதோ செய்கிறது தானே. அழகென்றால் ஏனோ, ஆண்கள் மனதில் தான் கண்டதில் தன்னைக் கவர்ந்த பெண்ணும், பெண்கள் மனதில் தான் கண்டதில் தன்னைக் கவர்ந்த ஆணுமே முதலில் வருகிறார்கள்.

ஒருவரைப் பார்த்ததுமே சிலாகிக்க வைக்கும் விஷயம் ஒன்னு இருக்குன்னா அது அழகு தானுங்க... என்ன தான் அழகு நிரந்தரமல்ல அப்படின்னு பேருக்கு பேசிக்கிட்டாலும் அழகை ரசிக்காம இருக்க முடியறதில்லைன்றது தான் நிஜம்...

பூவின் அழகு ஒரு நாள். இளமை அழகு முதுமை வரை, வசந்தத்தின் அழகு கோடை வரை இப்படின்னு அழகுக்கு முற்றுப்புள்ளி இருக்குதுன்னாலும் இருக்கும் வரை அழகை ரசிக்காம இருக்க முடியாதில்லை...

ஆனால், நாம பார்க்கப் போறது இந்த அழகைப் பத்தி இல்லைங்க. நாம பார்க்கப் போற அழகு, எது எது எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது. எது எது எப்படி இருக்கணும்னு சொல்ற தகுதி நமக்கேது.

காரியாசன் இயற்றிய சிறுபஞ்சமூலத்தைச் சும்மா புரட்டிட்டு இருக்கும்போது எது அழகுன்னு ஒரு பாடல் படிச்சேன். நீங்களுந்தான் தெரிஞ்சுக்குங்களேன்...

படைதனக்கு யானை வனப்பாகும்; பெண்ணின்
இடைதனக்கு நுண்மை வனப்பாம்; நடைதனக்குக்
கோடா மொழிவனப்பு; கோற்கதுவே; சேவகற்கு
வாடாத வன்கண் வனப்பு

என்ன? யார்யார்க்கு எது அழகுன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா... இன்னுமொரு சந்தர்ப்பத்தில் இன்னுமொரு பாட்டோட சந்திக்கிறேன்...

No comments:

Post a Comment