அழியும் உலக சுகங்கள் விடுத்து
பழியாய் தொடரும் உறவை விடுத்து
நிலையாய் இருக்கும் வழிவகைத் தேட
அறமாய் இருத்தல் துறவு.
இருக்கும் உறவை விலக்கிட வேண்டும்
இனியோர் உறவை தவிர்த்திட வேண்டும்
இரண்டுமே பாங்காய் நடந்தால் கிடைக்கும்
வரமாய்என் வாழ்வில் துறவு.
ஆசை அடக்கல் துறவறம் அன்று;வரும்
சாவைத் தவிர்த்தல் துறவறம் அன்று;பெறும்
வாழ்வை இனிய வரமென எண்ணி;தம்
வாழ்வினை வாழ்தல் துறவு.
இல்லத்தைக் காக்கும் வகையிலா மானுடர்
இல்லத்தை வாட்டி இடுகாடாய் மாற்றிட
இல்லறம் ஆகுமோ நல்லறம் கேட்பீர்நீர்
இல்லையோர்;துன் பம்துற வில்.
உறவில் சுகங்கள் கிடைப்பது உண்மை
உறவால் சுகங்கள் கிடைப்பதும் உண்மை
கிடைக்கும் சுகங்கள் நிலைத்திடல் என்றால்
துறவேச் சரியாம் உணர்.
பார்வையை மாற்றிடச் சொன்னீர் சரிசரி
பார்வையை மாற்றினால் மாறுமோ உண்மையும்
வாழ்க்கையின் இன்பம் நிலையிலை என்பதற்கு
வாழ்ந்திடும் வாழ்க்கையேச் சான்று.
சரியெது என்றும் பிழையெது என்றும்
அனைவர்க்கும் சொல்ல அறிந்தவர் யாரோ
அவரவர் செய்கை சரியாம் அவர்க்கு
தவறொன்றும் இல்லை அதில்.
இச்சையதைக் கொள்ளாதல் நன்றென்று சொல்லியதும்
இச்சைதான் என்று அறியுங்கால் வந்ததுவே
இச்சினால் பிழையும் எனக்கு
2 comments:
மிகச்சரியான கவிதை ...
ரொம்ப ரசித்தேன் .. வாழ்த்துக்கள்
nandri arasan avargale...
Post a Comment